புதன், 28 ஏப்ரல், 2010

சிதறிய சிறகுகள்

யாரோ போட்டு வைத்த அஸ்திவாரம்
நம் அடிவாரமாயிற்று..
வெட்டிப்பேச்சுக்கொரு பொட்டு
இட்டு வேஸ்டி கட்டும் எண்ணங்களோடும்
கட்டிப்பிடித்து முத்தமிடா காதல் காயங்கள்
அப்பப்ப தலைதூக்கும்..
இப்படித்தான் நாமே என நட்ட
கல் எப்போதும் புகை குடிக்கும்..
கதிர்விழும் திசையில் கால்நீட்டி நாமிருக்க
இத்துடன் இலவசமாக சிரிப்புகளும்..
காலம் வந்து கயிற்றறுக்க முத்துக்களாய்
சிதறிப்போனோமே அன்புத்தோழனே..
வறுமை வந்து வயிற்றிலடிக்க வாசற்
கதவு மட்டும் நமக்காக காத்திருக்கும்..
புயலெனத்தான் வந்ததோ நமக்கென கடமை
சுங்கம் வைத்த நாம் காற்றின் சருகாயானோம்
இப்போ நாம் சிதறிப்போன சிறகுகள்
பசுமைக்குயிலின் சிறகதனை காலம் தன்
பிடுங்கிக்கொண்டு அமைதியாகத்தான் போனது….!

வெள்ளி, 26 ஜூன், 2009

மொட்டைப் பனை

ஒற்றைடி; பாதையோரம் களங்கரை
விளக்கமென பட்டுப்போன அந்த
ஒற்றைப் பனை...
பாட்டி சொன்ன கதைகளிள் அதுவும்
ராஜாதான் செத்துப்போன தாத்தா
அங்கு கள்ளுக்குடிக்க போவாராம்,
வாட்டமுள்ள தேவடியா ஒருத்தி
சொட்டுச் சொட்டா ஊத்திக்கொடுப்பாளாம்
மிச்சமில்லாம குடிச்சாலும் நாலு காசுதானாம்
வெட்டித்தனமாக சில வட்டமேசை
மாநாடுகளும் பக்கம்பக்கமாய் கதைகளுமாம்
வாய்பேசாத வயித்தெரிச்சல் சுற்றிவந்து
கட்டிக்கொள்ள காலம் ஒவ்வொரு
பல்லையும் நாசுக்காக பிடிங்கி;க்கொண்டது
ரயிலோடும்தூரம் வரை எட்டிப்பார்த்த மரம்
இப்போ நாத்தம்புடிச்ச கம்மாக்கரையாய்
நாதியற்று நிற்கிறது..

வியாழன், 25 ஜூன், 2009

காதல்சுவடுகள்


உள்ளே வர அனுமதி கேட்ட தென்றல் வாசலிலே திரும்பிட முகம்வாடி நான் குப்புற புரண்டு ஆழமறியா சிந்தனையில் முத்துக்குளிக்கிறேன், அவள் முத்தமிட்ட கன்னங்களை தொட்டுப்பார்க்கையில் அப்பாவின் ரேகைகள் சத்தமில்லாமல் சங்கீதம் பாட அம்மா கண்ணீரை மட்டுமே மருந்தாக தருகிறாள்..